Monday, September 26, 2016

புதிய தலைமுறை நாளிதழ் மதி மிகு மாணவர் போட்டி நடைபெற இருக்கிறது

மாணவர்களின் திறனை வளர்த்து கொள்ள மதிமிகு மாணவர் என்ற திறன்  வளர்க்கும்  போட்டி நடைபெற உள்ளது  

பியர் கிரில்ஸ் சர்வைவல் அகாடமி


டிஸ்கவரி சேனல் புகழ்பியர் கிரில்ஸ் சர்வைவல் அகாடமி
 பள்ளி மாணவர்களுக்கு இயற்கை பற்றியும் இயற்கையோடு மனிதன் எவ்வாறு இயைந்து வாழ வேண்டும் என்று  சொல்லி தருகின்றதுஇந்த வரம் இத்தொடர்  ஒளிபரப்படுகிறது 






Wednesday, September 21, 2016

இதுவும் கல்விதான்!


பள்ளியின் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் தினந்தோறும், “என் நாட்டுக்காகவும் என் நாட்டு மக்களுக்காகவும் நான் இந்த உதவியைச் செய்கிறேன்” என ஈரோடு மாவட்டம் க. (வுந்தப்பாடி) ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்கள் சொல்லி உண்டியலில் காசு போடுகிறார்கள். பிறருக்கு உதவ வேண்டும் என்ற இந்த மனப்பான்மையை இவர்களுக்கு ஊட்டியவர் பள்ளித் தலைமை ஆசிரியர் அ.வாசுகி.
இருபது ஆண்டுகளாக ஆசிரியப் பணியில் இருக்கும் வாசுகி இதுவரை தான் பணிபுரிந்த இடங்களில் எல்லாம் முத்திரை பதித்தவர். செயல்வழிக் கற்றல் முறையை அரசு 2006-ல்தான் அறிமுகம் செய்தது. ஆனால், 2004-லேயே சலங்கபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தனது மாணவர்களைச் செயல்வழி முறையில் கற்கவைத்தவர் வாசுகி.
படிப்பு மட்டுமே மனிதனாக்காது
“படிப்பு மட்டும் போதாது. அன்பு, பாசம், பிறருக்கு உதவும் மனப்பான்மை எல்லாம் சேர்ந்துதான் ஒரு குழந்தையை முழுமையான மனிதராக மாற்ற முடியும்” என்கிறார் வாசுகி.
இந்தப் பள்ளியின் மாணவர்கள் தினமும் அன்று என்ன உதவி செய்தார்கள் என்பதை அடுத்த நாள் காலை வழிபாடுக் கூட்டத்தில் ‘நான் செய்த உதவி’ என்று தினம் ஒருவர் வீதம் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லி முடித்ததும், ‘உதவி செய்ய வாருங்கள் தோழர்களே’ என்று ஒரு மாணவர் அழைப்பார். அங்கிருக்கும் உண்டியலில் வகுப்புவாரியாக மாணவர்கள் காசு போட்டுவிட்டு, ‘என் நாட்டுக்காகவும் என் நாட்டு மக்களுக்காகவும் இந்த உதவியைச் செய்கிறேன்’ என்று சொல்லித் தன் பெயரையும் சொல்லிச் செல்வார்கள்.
மாணவர்களே தயாரித்த உண்டியல்
இந்த உண்டியல்கூட மாணவர்களே தயாரித்ததுதான். ஆண்டு இறுதியில் சேர்ந்திருக்கும் மொத்தப் பணத்தையும் யாருக்கு என்ன உதவி செய்யலாம் என்று அவர்களே கூடித் தீர்மானிக்கிறார்கள். அவர்களுக்கு வழிகாட்டியாக மட்டும் வாசுகி இருக்கிறார். உள்ளூரில் யாருக்கும் உதவி செய்வதில்லை எனத் தீர்மானித்திருக்கிறார்கள்.
கடலூர் பாதிப்புக்குக் கரம் நீட்டியவர்கள்
இதுவரை, கருணை இல்லங்களுக்குத் தேவையான பீரோ, சோபா, ஃபேன் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் பகுதி மக்களுக்காக இரண்டாயிரம் ரூபாய் நிதியுடன் வீட்டிலிருந்து அரிசி, பருப்பு என அத்தனை அத்தியாவசியப் பொருட்களையும் கொண்டுவந்து குவித்திருக்கிறார்கள். சென்னையைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்குச் சீருடைகள், விபத்தில் காயப்பட்டு சிகிச்சையில் இருந்த ஒரு மாணவிக்காக இரண்டாயிரம் ரூபாய் உதவி என இவர்களின் ஈகைப் பட்டியல் நீள்கிறது.
உதவி வாங்கிக் கழித்தல்
“சமுதாயத்தின் மோசமான கருத்துகள் எதுவும் இந்தப் பிள்ளைகளின் மனதைப் பாதித்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். அதனால், அவர்களின் சிநேகிதியாக இருக்கிறேன். பொதுவாக ஆசிரியர்கள், ‘கடன் வாங்கிக் கழித்தல்’ என்பார்கள். ஆனால் நான், ‘உதவி வாங்கிக் கழித்தல்’ என்று சொல்லிக் கொடுப்பேன். உதவி செய்தால் திருப்பித் தர வேண்டாம் என்பதையும் அவர்களுக்குப் புரியவைப்பேன்” என்று வித்தியாசமாகச் சிந்திக்கிறார் வாசுகி.
கிடைத்த அங்கீகாரங்கள்
பள்ளி வளாகத்தில் ஏதாவது பொருள் கீழே கிடந்தால் அதை எடுத்துக்கொண்டு போய் அதற்கென வைக்கப்பட்டுள்ள பிரத்யேகப் பெட்டியில் மாணவர்கள் போட்டுவிட வேண்டும். பொருளைத் தவறவிட்டவர் எங்கும் தேட வேண்டாம். அந்தப் பெட்டியிலிருந்து தங்களது பொருளை எடுத்துக்கொள்ளலாம். எந்தப் பொருளையும் இந்த மாணவர்கள் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்துவதில்லை.
இதையெல்லாம் இந்த மாணவர்களுக்குக் கற்றுத் தந்திருக்கும் வாசுகியைத் தேடி விருதுகள் வந்துகொண்டே இருக்கின்றன. இடைநின்ற மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்து வந்ததற்காக ‘காமராஜர் நல்லிணக்க விருது’, புதுமையைப் புகுத்தியதற்காக அகமதாபாத் ஐ.ஐ.எம். நிறுவனத்தின் ‘கற்றலில் புதுமையைப் புகுத்தியவர் விருது’ போன்றவை வாசுகியின் தன்னலம் கருதாச் சேவைக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரங்கள்.

Monday, September 19, 2016

உலகின் தலைச்சிறந்த ஆசிரியர் -Hanan Al Hroub WINNER Samiha Khalil Secondary School, Palestine

BIOGRAPHY

Hanan grew up in the Palestinian refugee camp, Bethlehem, where she was regularly exposed to acts of violence. She went into primary education after her children were left deeply traumatised by a shooting incident they witnessed on their way home from school. Her experiences in meetings and consultations to discuss her children’s behaviour, development and academic performance in the years that followed led Hanan to try to help others who, having grown up in similar circumstances, require special handling at school.
“We just want peace; we want our children to enjoy their childhoods in peace.”
With so many troubled children in the region, Palestinian classrooms can be tense environments. Hanan embraces the slogan ‘No to Violence’ and uses a specialist approach she developed herself, detailed in her book, ‘We Play and Learn’. She focuses on developing trusting, respectful, honest and affectionate relationships with her students and emphasises the importance of literacy. She encourages her students to work together, pays close attention to individual needs and rewards positive behaviour. Her approach has led to a decline in violent behaviour in schools where this is usually a frequent occurrence; she has inspired her colleagues to review the way they teach, their classroom management strategies and the sanctions they use.
Hanan has shared her perspective at conferences, meetings and teacher training seminars. She hopes that, with education, her people can reclaim their homeland.
  • Grew up in a Palestinian refugee camp; motivated to teach by her experiences as a mother of children traumatised by a shooting incident
  • Offers specialist care to pupils exposed to violence
  • Focuses on providing a safe space in the classroom and pays attention to individual needs
  • Has shared her approach at Ministry conferences and teacher training seminars

Sunday, September 18, 2016

இமயத்தில் ஓர் உன்னத கல்வி பணிschool in himalaya


 
இப்பள்ளி இமயமலையின் லாடக் பகுதியில் அமைந்து உள்ளது,உலகின்  மிக உயரமான இடத்தில்  பள்ளி சேவை நோக்கோடு  செயல்பட்டு  வருகிறது ,3 இடிடாஸ்  படம் இங்குதான் எடுக்கபட்டது .Druk White Lotus School is located in SheyLadakh, in northern India, and is known locally as the Druk Padma Karpo School. Karpo means White and Padma means Lotus in the local language Bodhi.

The school was started at the request of the people of Ladakh who wanted a school that would help maintain their rich cultural traditions, based on Tibetan Buddhism, while equipping their children for a life in the 21st century.
The masterplan and school buildings, designed by architects and engineers from Arup Associates and Ove Arup & Partners, combine local building techniques and materials with leading edge environmental design to make them effective in the extreme climate. In 2012, landscape architects from the School of Architecture, Design and Construction at the University of Greenwich began work on a landscape master plan and garden for the DWLS School.
The school offers a broad education, initially in the Ladakhi language and English. Residential blocks allow children from Ladakh's remote areas to attend, and a programme of sponsorship ensures that the poorest are not excluded. It is managed by the Druk Pema Karpo Educational Society and financed with money raised internationally.
Druk White Lotus/Padma Karpo school is being built in stages. The Nursery and Infant Courtyard opened in September 2001, and the Junior School in November 2004. Middle and Secondary School facilities were built year by year as funds permitted, with the last two secondary school classrooms completed in 2014. Additional facilities for residential students and the school are ongoing.
The school was featured in a 2007 episode of the PBS series Design e2,[1] Cisco Systems "Human Network" advertisement as well as the Aamir Khan movie 3 Idiots. The school was damaged in August 2010 when cloudbursts caused flash floods that washed mud and boulders into many school buildings.[2][3] The Bollywood star Aamir Khan made a special effort to lend a helping hand.[4]

அரசுப் பள்ளி மாணவர்களின் கலை ஆர்வம்: தெர்மோகோலில் தத்ரூபமாக உருவாக்கிய மாமல்லபுர கடற்கரை கோயில்

களிமண், தெர்மோகோலில் கலைப் படைப்புகளை உருவாக்கி அசத்தி வருகிறது புதுச்சேரி கிராமப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி. சாதாரணமாக சிறு பொம்மைகளை செய்து வந்த பள்ளி மாணவர்கள், தற்போது முதல்முறையாக 8 அடி உயர மாமல்லபுரம் கடற்கரை கோயிலை ஒருமாத உழைப்பில் உருவாக்கி உள்ளனர்.
புதுச்சேரி கிராமப் பகுதியான நெட்டப்பாக்கத்தில் உள்ளது கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி. இப்பள்ளியின் நுண்கலை ஆசிரிய ரான ராஜக்கண்ணன் மற்றும் இப்பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு கலைப் படைப்புகளை உருவாக்கி வருகின்றனர். ஓவியம் வரைதல், களிமண்ணில் சிறு பொம்மைகள் செய்தல் ஆகிய வற்றில் ஈடுபட்டு வந்தனர். தற் போது முதல் முயற்சியாக தெர் மோகோலில் பெரிய கலைப் படைப்பை வடிவமைத்துள்ளனர்.
இது தொடர்பாக நுண்கலை ஆசிரியர் ராஜக்கண்ணன் கூறும் போது, “பிளைவுட் பலகையில் கடற்கரை கோயில் படத்தை வரைந்து அதன் மேல் கோயில் கோபுர சிற்பங்களை தனித்தனி யாக தெர்மோகோலில் உருவாக்கி னோம். அதை பலகையில் பசை யால் ஒட்டினோம். பின்னர் காகிதங்களை வெட்டி பகுதி, பகுதியாக வடிவமைத்தோம்.
ஒரு மாத உழைப்பு
ஒரு மாதத்தில் 20 மாணவர் களுடன் இணைந்து இப்படைப்பை உருவாக்கினோம். தற்போது வண்ணம் பூசி மெருகேற்றி யுள்ளோம்.
இந்த தெர்மோகோல் கலைப் படைப்பு 8 அடி உயரம், 6 அடி அகலம் உடையது. வீணாக தூக்கி எறியும் பொருட்களில் இருந்தும் எங்கள் பள்ளிக் குழந்தைகள் கலைப் படைப்புகளை உருவாக்கு வார்கள். நமது கலைப்பொக்கி ஷங்கள் மீதான விழிப்புணர்வை குழந்தைகளுக்கு ஏற்படுத்தவே இக்கடற்கரை கோயிலை வடி வமைத்தோம். அடுத்து வேறு படைப்புகளையும் உருவாக்க உள்ளோம்” என்றார்.
பள்ளியின் துணை முதல்வர் ராமு கூறும்போது, “எங்கள் பள்ளியில் அனைவருமே கிராமப் பகுதி மாணவ, மாணவிகள். கற்பனைத்திறன் அதிகம் இருப்ப தால் ஒரு பொருளை பார்த்து விட்டால் அதேபோல் உருவாக்கும் திறனுடையவர்கள். அவர்களுக்கு இது மகிழ்வான அனுபவம்” என்றார்.
மாணவர்கள் உற்சாகம்
மாணவ, மாணவிகள் கூறும் போது, “எங்கள் பள்ளியில் படைப் பாற்றலை ஊக்குவிக்கும் வகை யில் ஓவியம் வரைய, சிற்பம் வடிவமைக்க கற்றுத் தருகின்றனர். முதல்முறையாக மாமல்லபுரம் கடற்கரை கோயிலை 8, 9-ம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியருடன் இணைந்து உருவாக்கினோம். இப்படைப்பை உருவாக்கிய பிறகு அதில் எங்கள் பங்கும் இருக்கிறது என்பதை நினைத்தாலே சந்தோஷ மாக இருக்கிறது” என்றனர்.
மாணவர்களுக்கு கல்வி யோடு செயல்வழி கற்றல், படைப்பாக்கத்தைத் தூண்டும் கற்றல் மிக அவசியம் என்பதை சில பள்ளிகள் உணரத் தொடங்கி மாற்றுப் பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கின்றன. அதில் ஒன்று புதுச்சேரி - நெட்டப் பாக்கத்தில் உள்ள இந்த கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி.


Saturday, September 17, 2016

தாகூரின் இயற்கை ஊற்று வித்யா வனம் பள்ளி- ஆனைமலை



இயற்கை வழி கற்றலின் உன்னத நீர் ஊற்று வித்யா வனம் பள்ளி  ஆனைமலை -யில் அமைந்துள்ளது  ,கோவை மாவட்டம்  மேற்கு  தொடர்ச்சி மலையின் மேல் அமைந்துள்ள இப்பள்ளி  இப்பகுதி மலைவாழ்  மாணவர்களுக்கு   CBSE கல்வியை அளித்து வருகிறது


ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் தமிழ்நாடு அரசு பள்ளி ஒன்றை செயல் படுத்தி வருகிறது


முற்றிலும் தீவு  கிராமம் ,தினமும்  ஆசிரியர்கள்  4 km  நடந்துவந்து  இங்கு மீனவர்களின் பிள்ளைகளுக்கு  பாடம்  எடுக்கின்றனர்

Thursday, September 15, 2016

உலகின் அதிபயங்கர பள்ளி பயணம் -சீனா Is this the world's toughest school run?

Is this the world's toughest school run? Children from remote Chinese village have to climb unsecured vine ladders on a vertical cliff between home and class

  • Children from Atule'er village were pictured climbing vine ladders to go back to remote homes at 2,624 feet high
  • The perilous journey takes two hours and they are supervised by parents who use ropes to ensure their safety 
  • An official of Shaojue County said the trip could be extremely dangerous and it had killed around eight residents
  • Due to the treacherous commute, some children from the village can't receive education after they reach school age

Wednesday, September 14, 2016

என் ஆசிரியர்க்கு என்னை பற்றி தெரியுமா ? i wish my teacher new



Kyle Schwartz is a third grade teacher in Denver, CO. As a young adult, she worked at the education nonprofit City Year in Washington D.C., where she painted murals, scrubbed off graffiti, and served food to the homeless. After City Year, she moved to South America to work on the program, English Opens Doors, a joint effort of the United Nations Development Fund and the Chilean Ministry of Education, which opened her eyes to how much teachers can do for their students. When Schwartz returned to the U.S., she worked as a student teacher for a year while earning a master’s degree in education from the University of Denver.

One day, third-grade teacher Kyle Schwartz asked her students to fill in the blank in this sentence: “I wish my teacher knew _______ .”
The results astounded her. Some answers were humorous; others were heartbreaking. All were profoundly moving and enlightening. The results opened her eyes to the need for educators to understand the unique realities their students face in order to create an open, safe, and supportive classroom environment. When Kyle shared her experience online, teachers around the globe began sharing their own contributions to #IWishMyTeacherKnew.
Kyle’s book tells the story of the #IWishMyTeacherKnew movement, with dozens of students’ handwritten emotional and insightful responses throughout. It provides a look at systemic problems that affect students nationwide, like poverty and mobility, alongside issues that affect millions of individual students, such as trauma and the challenge of developing meaningful classroom relationships. Kyle shares real stories from students, teachers, and family members that shed light on how we can all help students tackle challenges and grow as individuals. She shares strategies that can work in classrooms across America, ultimately presenting a practical guide to adapt the I Wish My Teacher Knew exercise to suit any classroom’s needs or educator’s teaching style

அன்பாசிரியர் 25: தங்கராஜ்- உழைப்போடு ஊதியத்தையும் தரும் ஆசான்

நல்ல ஆசிரியர் கடந்து வந்த பாதையைப் பார்க்கிறார். சிறந்த ஆசிரியரோ செல்ல வேண்டிய பாதையை நோக்கிப் பயணிக்கிறார்.
கற்றலில் பின்தங்கிய அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்க ஓர் ஆசிரியரை நியமித்து ஒன்பது ஆண்டுகளாக அவருக்கு தன் சொந்த செலவில் சம்பளம் கொடுத்து வருகிறார் நாமக்கல் நாமகிரிப் பேட்டை, ஊத்துப்புளிக்காடு அரசு ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர் தங்கராஜ். பள்ளியின் கட்டமைப்பு வசதிகளுக்கு அரசு ஒதுக்கிய தொகையைவிட அதிகம் தேவைப்படும்போது தன் சம்பளத்தைக் கொடுத்து, அவற்றைக் கட்டி முடித்திருக்கிறார். தன் அயராத உழைப்பால் 34 மாணவர்களாக இருந்த ஆரம்பப்பள்ளி மாணவர் எண்ணிக்கையை 214 ஆக மாற்றியிருக்கிறார்.
இந்த ஆசானின் ஆசிரியப்பயணம் இந்த அத்தியாய அன்பாசிரியரில்...
''சின்ன வயதில் நண்பர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த பழக்கம் கற்பித்தலின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. நாட்கள் செல்லச்செல்ல சமூகத்தில் மாற்றத்தின் விதையை ஊன்றும் எண்ணம் அதிகமானதால், ஆசிரியர் ஆனேன். ஆரம்பத்தில் ஆசிரியப்பயிற்சி முடித்து 1990-களின் தொடக்கத்தில் தனியார் பள்ளியில் 150 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்தேன். மாலை நேரப்பணியாக மாணவர்களுக்கு அதே 150 ரூபாயில் ட்யூஷன் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தேன். என்னுடைய 12 மணி நேர உழைப்புக்கு ஊதியமாக ரூ. 300 சம்பளம் வாங்கினேன்.
சில வருடங்கள் ஓடின. நான்காயிரம் ரூபாயில் அரசுப் பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்தது. அப்படியென்றால் எவ்வளவு வேலை செய்யவேண்டும் என்று தோன்றியது. என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேலை செய்யவேண்டும் என்று முடிவெடுத்தேன். நான் சிறப்பு வழிமுறைகள் எதையும் வகுத்து வேலை பார்ப்பதில்லை. ஆனால் மாணவர்களின் கல்வி, ஒழுக்கத்தை வளர்க்க எத்தனை முறை வேண்டுமானாலும் என்னால் சொல்லிக்கொடுக்க முடியும்.
1999-ல் ஊத்துப்புளிக்காட்டில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போதைய தலைமை ஆசிரியர் முழு சுதந்திரத்துடன் இயங்க அனுமதித்தார். காலையில் 8.15 மணிக்கு பள்ளிக்குச் செல்வேன். 3, 4, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 8.45 முதல் 9.15 மணி வரை தினமும் ஆங்கிலம் சொல்லித்தருகிறேன். வினைச்சொல் புத்தகம் (Verb book) மூலம் அடிப்படை இலக்கணத்தைக் கற்பிக்கிறோம். ஒவ்வொரு வருடமும் இப்பயிற்சி தொடர்ந்து வழங்கப்படுவதால் ஐந்தாம் வகுப்பு முடித்து வெளியே செல்லும் மாணவர், 3 வருட அனுபவத்தோடு செல்கிறார்.
தூய்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். பள்ளியில் அளிக்கப்படும் சீருடைகள் பெற்றோர்கள் மூலம் சீரிய முறையில் தைக்கப்படுகின்றன. மாணவர்கள் டைரி, பெல்ட், ஐடி கார்ட் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள். தினமும் குழந்தைகள் என்ன செய்யவேண்டும் என்பதைப் பெற்றோர்கள் பார்க்க வேண்டும். அதைச்சொல்லிக்கொடுத்து டைரியில் கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும். படிப்பறிவு இல்லாத பெற்றோர்களிடம் குழந்தைகளை சத்தம் போட்டுப் படிக்கச் சொல்லுங்கள் என்று அறிவுறுத்துகிறோம்.
கையெழுத்தை மேம்படுத்த தினமும் வீட்டுப்பாடம் கொடுக்கிறோம். தமிழ்ப் பயிற்சிக்கு ஒரு நோட்டில் பொன்மொழிகளை இரண்டு வரிகளிலும், ஒற்றை வரியிலும், வரியே இல்லாமலும் 3 முறை எழுத வேண்டும். ஆங்கிலப் பயிற்சிக்கு நான்கு வரிகளிலும், ஒரு வரியிலும், வரியில்லாமலும் எழுதவேண்டும். தினசரிப் பயிற்சி என்பதால் சலிப்பு தட்டாமல் இருக்க ஒவ்வொரு வருடமும் சிறந்த கையெழுத்துக்குப் போட்டி வைத்துப் பரிசுகள் தருகிறோம்.
ஆங்கில நாடகங்கள், அறிவியல் கருத்தரங்குகள் ஆகியவற்றை தொடர்ந்து நடத்தி வருகிறோம். பள்ளியைச் சுற்றிலும் 40 மரங்கள், 250 செடிகள் வளர்க்கப்படுகின்றன. ஊராட்சி ஒன்றிய நிதியால் ஆழ்துளைக்கிணறு அமைக்கப்பட்டு நீர் வசதி அமைக்கப்பட்டுள்ளது. 2007-ல் பள்ளியில் +2 முடித்தவரை ஆசிரியராக அமர்த்தினோம். அப்போது அவரின் சம்பளம் ரூ. 400. இதோ இப்போது ஒன்பதாவது ஆண்டில் அவர் நான்காயிரம் சம்பளம் பெறுகிறார். இப்போது வரை அவருக்கு என் சொந்தப்பணத்தில் இருந்து சம்பளம் கொடுக்கிறேன். இப்போது ஐந்து வகுப்புகளுக்கும் ஐந்து ஆசிரியர்கள் உள்ளனர். ஆறாவதாக அவர் மற்ற ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கும்போதும், மற்ற நாட்களில் கற்றலில் பின் தங்கியவர்களுக்கும் பாடம் சொல்லிக்கொடுக்கிறார்.
2003-ல் சத்துணவு மேற்பார்வையாளர் எங்களின் பள்ளிக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். பள்ளியைக் கண்டு வியந்தவர், உங்கள் பள்ளிக்கு விருதுகள் எதுவும் கொடுக்கவில்லையா என்று கேட்டார். அந்த வார்த்தைகள்தான் முதன்முதலில் என்னை ஊக்கமடைய வைத்தன. ஒருமுறை மாவட்ட திட்ட அலுவலக கண்காணிப்பாளர், எங்களின் பள்ளிக்கு வருகை தந்தார். செய்தித்தாள் வாசிப்பு, பொம்மலாட்டம், கதை, கவிதை சொல்வதில் மாணவர்களின் திறனைப் பார்த்த அதிகாரி இந்தப்பள்ளிக்கு நிச்சயம் ஏதாவது செய்யவேண்டும் என்று கூறிச்சென்றார். சொன்னபடியே பள்ளிக்கு சில மாதங்களிலேயே மூன்று கணினிகள் வழங்கப்பட்டன. (நடுநிலைப்பள்ளிக்கு மட்டுமே கணினி வழங்கப்பட்ட காலம் அது)
ஒருமுறை காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நிதியாக ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டது. அத்தோடு என் சம்பளப் பணத்தில் இருந்து 15 ஆயிரம் எடுத்து 40 ஆயிரத்துக்கு இரண்டு வகுப்புகளும், ஒரு கிடங்கையும் கட்டிமுடித்தோம். தண்ணீர்த்தொட்டி அமைக்க ரூ.28 ஆயிரம் வழங்கப்பட்டது. 10 அடி ஆழம், 7 அடி அகலத்தோடு உயர்தர டைல்ஸ் கொண்டு தொட்டி அமைத்தோம். கட்டி முடிக்க ரூ.50 ஆயிரம் செலவானது. குடிநீர் உயிர்நாடி என்பதால் மீதிப்பணத்தை நானே கொடுத்துவிட்டேன்.
பள்ளியில் அடிக்கடி விழாக்கள் நடைபெறுவதால் அவை சிரமமின்றி நடக்க கலையரங்கம் தேவை. ஆனால் தொடக்கப்பள்ளிக்கு அதைக் கேட்பது முறையாகாது எனத் தோன்றியது. அதனால் 20 அடி அகலம், 26 அடி நீளத்தில் தற்காலிக மேடை ஒன்றை என்னுடைய செலவிலேயே (12 ஆயிரம்) அமைத்திருக்கிறேன். விழாவுக்கு வந்த அதிகாரிகள் அதைப் பார்த்துவிட்டு கலையரங்கம் கட்டுவதற்காக 5 லட்சம் ஒதுக்கப்படும் என்று மேடையிலேயே அறிவித்துவிட்டார்கள்'' என்று மகிழ்கிறார் அன்பாசிரியர் தங்கராஜ்.
பொதுமக்களிடம் நன்கொடைகள் வாங்கி அவற்றைப் பயன்படுத்தலாமே என்று கேட்டால், '' ஊத்துப்புளிக்காடு 349 பேரை மட்டுமே கொண்ட சின்ன கிராமம். இங்குள்ள விவசாய மக்கள் உணவுக்கே சிரமப்படுகிறார்கள். அவர்களிடம் பணம் கேட்கவே கூசுகிறது. பணமாகக் கொடுக்க முடியாவிட்டாலும், அவர்கள் தங்களின் உடல் உழைப்பை அளிக்கின்றனர்.
கட்டிட வேலைகளின்போது ட்ராக்டர் மூலம் மண் கொண்டுவந்து கொட்டிவிட்டுக் காசே வாங்காமல் சென்றார் ஒருவர். எங்கள் பள்ளிக்கான மின்சாரம்கூட பக்கத்து வீட்டுக்காரரிடம் இருந்துதான் வாங்கப்படுகிறது. அதற்கான தொகையை அவர் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அதனாலேயே நாங்களும் மின்சாரத்தைச் சிக்கனமாகவே பயன்படுத்துகிறோம்.

சூப்பர் சிங்கர் அரசு பள்ளி மாணவி ப்ரித்திகா சாதனை

விஜய் தொலைக்காட்சி  நடத்திய சூப்பர் சிங்கர் 5 போட்டியில்  பல்வேறு  குழந்தைகள்  பங்கேற்றனர்.இப்போட்டியில் திருவாரூர் அரசு பள்ளி மாணவி பிரி...